பாலா – அதர்வா இணையும் படத்தை தயாரிக்கும் சூர்யா.??

Published by
பால முருகன்

பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அடுத்ததாக நடிகர் அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில், தற்போது பாலா – அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தை பிரபல நடிகரான சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அதர்வா பரதேசி என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்ததற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தது.இந்த நிலையில், மீண்டும் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பது உறுதியாகி விட்டால் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Published by
பால முருகன்

Recent Posts

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

2 minutes ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

27 minutes ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

53 minutes ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!

லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…

1 hour ago

”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது” – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…

3 hours ago

”குரூப் 4 தேர்வுரூப் 4 க்கான வினாத்தாள் கசியவில்லை” – டிஎன்பிஎஸ்சி விளக்கம்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…

3 hours ago