சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி மற்றும் தமிழகத்தின் குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இது முடிந்துவிட்டால் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும்.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…