9 எபிசோட் வீதம் உருவாகவுள்ள வெப் சீரிஸின் ஒரு பகுதியில் சூர்யா நடிப்பதாகவும், 180 படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் வரும் சம்பளத்தை அனாதை இல்லங்களுக்கு நிதியுதவியாக வழங்கவுள்ளராம்.
சமீபத்தில் மணிரத்னம் அவர்கள் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக வும், 9 எபிசோடுகளை கொண்ட அந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடையும ஒவ்வோரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உட்பட பல தெலுங்கு திரையுலகினை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர் சித்தார்த், அரவிந்த் சாமி ஆகியோரும் இந்த தொடரின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்கள். இந்த நிலையில் சூர்யா அதில் ஒரு எபிசோடில் நடிக்கிறார். ‘நவரசா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸை ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் நடித்த ‘180’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…