வருங்கால காதல் கணவரின் பெயரை டாட்டூ போட்ட பிக்பாஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

Published by
Ragi

பிக்பாஸ் பிரபலமான வனிதா தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் – 3 இல் கலந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களையும் வறுத்து எடுத்து விட்டார் என்றே கூறலாம். அதன் மூலம் பிரபலமான வனிதா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். தற்பொழுது யூடியூப் சேனலை தொடங்கி பிஸியாக வலம் வரும் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆம் வரும் ஜூன் 27ம் தேதி பீட்டர் பவுல் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிய இவருக்கு 2பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட வனிதா நடன இயக்குனரான ராபர்ட் அவர்களுடன் பழக்கம் இருந்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாக கூறிய இவர்களுக்கு சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. தற்போது நண்பரான பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய போவதாக அவரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்திருந்தார். அதற்கு அவரது மகளும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படத்தையும், பீட்டர் பவுல் அவரது கையில் வனிதா என்ற பெயரையும் டாட்டூ போட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

56 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago