சமீபத்தில் தளபதி விஜயின் “பிகில்” திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் ,வரவேற்பு ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.இதனை தொடர்ந்து மாநகரம், கைதி திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் “தளபதி 64” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது படக்குழு டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.
பிகில் இசை வெளியிட்டு விழாவின் போது எனது திரைப்படத்திற்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என விஜய் அவரது ரசிகர்களுக்கு வேண்டுக்கொள் விடுத்து இருந்தார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் திரைப்படம் வெளியானபோது பேனருக்கு பதிலாக ரசிகர்கள் திரைப்படத்திற்கு வந்த பொது மக்களுக்கு விதைபந்துகள் கொடுத்தனர்.
நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமராவை வழங்கினார்கள். இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் இளைஞர் அணி தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் மூலம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக பத்து பள்ளிகள் மேம்படுத்தும் பணியை தொடங்க உள்ளனர்.
இந்த மேம்படுத்தும் பணியில் கழிவறை சீரமைப்பு, சிசிடிவி கேமரா பொருத்துதல் , நூலகம் அமைத்தல், சுவர் ஓவியம் வரைதல், கணினி வழங்குதல், தண்ணீர் வசதி போன்ற பல பணிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இளைஞர் அணி 5,00,000 மதிப்பில் இந்த பணிகளை செய்ய உள்ளனர். இப்பணி வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…