ஜெய் பீம் மீதான உங்கள் அலாதியான அன்பிற்கு நன்றி என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமொள் ஜோஸ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில அரசியல்வாதிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு கூட சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சூர்யாவின் பக்கம் நின்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பர்களே ஜெய்பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இதற்கு முன் நான் இவ்வளவு அன்பை பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. என்னுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…