தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டு தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் எனவும் காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது அவரது ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறி வந்தனர்.
தற்பொழுது இது தொடர்பாக ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அதே போல எனது நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…