அமைதியை நிலைநாட்ட சுமார் 200 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

கடந்த 2001 முதல் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5,000 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எங்களிடம் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்தனர். அதன்படி, ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து இதுவரை 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. அந்நாட்டு தலைநகர் காபூலில் உள்ள தலைமை சிறைச் சாலையிலிருந்து 200 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு தலிபான்களும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசு கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையிலேயே தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

5 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

37 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

39 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago