அமைதியை நிலைநாட்ட சுமார் 200 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

கடந்த 2001 முதல் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5,000 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எங்களிடம் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்தனர். அதன்படி, ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து இதுவரை 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. அந்நாட்டு தலைநகர் காபூலில் உள்ள தலைமை சிறைச் சாலையிலிருந்து 200 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு தலிபான்களும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசு கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையிலேயே தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

5 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

6 hours ago