இந்தோனேசியாவில்,திருமணத்தன்று மாப்பிள்ளை ஒருவர் கூகுள் மேப்பால் வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில்,இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாவா தீவில் திருமண ஏற்பாடு செய்யப்படிருந்தது.திருமண நாளன்று மாப்பிளை வீட்டார் அனைவரும் மண்டபத்திற்கு கார் மற்றும் வேனில் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளனர்.
அப்போது,வந்து சேர வேண்டிய இடமாக ஒரு மண்டபத்தை கூகுள் மேப் காட்டியுள்ளது.உடனே அனைவரும் இறங்கி மண்டபத்தினுள் சென்றனர்.மாப்பிள்ளை யார் என்று பார்க்காமல் தடபுடலான வரவேற்பை அங்கு இருந்தவர்கள் கொடுத்தனர்.
ஆனால்,அங்கு வேறொரு மணமகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அதன் பின்னர்தான்,ஜாவா தீவில் இரண்டு மண்டபங்கள் அடுத்தடுத்த தெருவில் இருந்ததனால் கூகுள் மேப் தவறான வழியைக் காட்டியுள்ளது என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாப்பிள்ளையும் அவரது பெற்றோரும் அவர்களிடம் மன்னிப்பு கோரினர்,பின் அவர்களிடமே சரியான திருமண மண்டபத்தின் முகவரியை கேட்டு சென்றுள்ளனர்.இதனால் மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களானது நம் வாழ்க்கையை எளிதாக்கி இருந்தாலும்,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை முழுமையாக நம்பியிருப்பது மக்களுக்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிருபணமாகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…