இந்தோனேசியாவில்,திருமணத்தன்று மாப்பிள்ளை ஒருவர் கூகுள் மேப்பால் வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில்,இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாவா தீவில் திருமண ஏற்பாடு செய்யப்படிருந்தது.திருமண நாளன்று மாப்பிளை வீட்டார் அனைவரும் மண்டபத்திற்கு கார் மற்றும் வேனில் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளனர்.
அப்போது,வந்து சேர வேண்டிய இடமாக ஒரு மண்டபத்தை கூகுள் மேப் காட்டியுள்ளது.உடனே அனைவரும் இறங்கி மண்டபத்தினுள் சென்றனர்.மாப்பிள்ளை யார் என்று பார்க்காமல் தடபுடலான வரவேற்பை அங்கு இருந்தவர்கள் கொடுத்தனர்.
ஆனால்,அங்கு வேறொரு மணமகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அதன் பின்னர்தான்,ஜாவா தீவில் இரண்டு மண்டபங்கள் அடுத்தடுத்த தெருவில் இருந்ததனால் கூகுள் மேப் தவறான வழியைக் காட்டியுள்ளது என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாப்பிள்ளையும் அவரது பெற்றோரும் அவர்களிடம் மன்னிப்பு கோரினர்,பின் அவர்களிடமே சரியான திருமண மண்டபத்தின் முகவரியை கேட்டு சென்றுள்ளனர்.இதனால் மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களானது நம் வாழ்க்கையை எளிதாக்கி இருந்தாலும்,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை முழுமையாக நம்பியிருப்பது மக்களுக்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிருபணமாகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…