பாட்ஷா படத்தினை கைத்தட்டி ரசித்த குழந்தை .! வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வாழ்த்திய ரஜினி.!

Published by
Ragi

பாட்ஷா படத்தினை கைத்தட்டி ரசித்த குழந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி ரஜினி வாழ்த்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.. அவரது ஸ்டைலுக்கு என்றே ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு .அவரது சினிமா வாழ்க்கையில் வசூலில் அள்ளி குவித்த திரைப்படங்களில் ஒன்று பாட்ஷா .  கடந்த 1995-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரும் மாணிக்கம் கேரக்டரிலும், பாட்சா கேரக்டரிலும் நடித்து மிரள வைத்திருப்பார்.

இதில் வரும் அனைத்து பாடல்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வசனமும் 25 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்றும் அனைவரிடத்திலும் ஒலித்து கொண்டிருக்கிறது . இந்த நிலையில் ரஜினியின் பாட்ஷா படத்தினை சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ரஜினி ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் ,கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ,கைவிட்டுடுவான் என்ற வசனம் பேசிய போது,அதனை பார்த்துகொண்டிருந்த குழந்தை கைத்தட்டி ரசித்தது .

அதனை குழந்தையின் பெற்றோர்கள் வீடியோ எடுத்து ரஜினிகாந்த் அவர்களின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமதுவுக்கு அனுப்பி வைக்க , அதற்கு ரஜினிகாந்த் குழந்தைக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும், நன்றி என்று குழந்தையின் பெற்றோருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளனர் . இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர் . அது மட்டுமின்றி இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago