வணிகம்

கொரோனா மருத்துவமனையில் முதியவரை கட்டியணைத்து அழுத மருத்துவர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Published by
லீனா

அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த டாக்டர் ஜோசப் வரோன், டெக்சாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும்  நிலையில்,முதியவர் ஒருவரை கட்டியணைத்து அழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்டது. இதுவரையிலும் இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பொது மக்கள் முக கவசம் சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை தங்களது அன்றாட வாழ்க்கையில்  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த டாக்டர் ஜோசப் வரோன், டெக்சாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார். இவர் 252 நாட்களாக தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார. இவர் எத்தனையோ நோயாளிகளை பார்த்த நிலையில், முதியவர் ஒருவரின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கிய புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நான் மருத்துவமனை ஐசியுவிற்கு சென்றேன். அங்கே ஒரு முதியவர் படுக்கையிலிருந்து இறங்கி அறையை விட்டு வெளியேற முயற்சித்தார். அவர் அழுது கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் மனைவியிடம் செல்லவேண்டும். அவர் கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

நான் மிகவும் வருத்தப்பட்டேன். நானும் அவரைப் போல தான், அவரை நான் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினேன். அவருக்கு ஆறுதல் கிடைத்திருக்கும். அவர் அதன்பின் அவர் அருகே நிறுத்தினார் நான் ஏன் அவ்வளவு துயருற்றேன் என்று தெரியவில்லை. எங்கள் செவிலியர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். நீங்களே யோசித்துப் பாருங்கள் நீங்கள் ஒரு அறைக்குள்ளேயே இருக்கிறீர்கள் உங்களை தேடி வரும் மனிதரும் கவச உடை அணிந்து வருபவர் மட்டுமே, எப்படி இருக்கும் அதுவும் வயதானவர்களுக்கு இன்னும் மனவருத்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆனால்  இன்று பலர் கொரோனா சூழலை கருத்தில் கொள்ளாமல், மாஸ்க் அணியாமலும் தனிமனித இடைவெளியை மறந்தும் வெளியில் சுற்றிக் திரிகிறார்கள். அவர்கள் அப்படி இருந்தால், ஐசியூ அறைக்குள்  அடைபட நேரிடும் என்றும், மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான், என்னைப் போன்ற மருத்துவர்களும், செவிலியர்களும் ஓய்வெடுக்க முடியும் என  வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

4 hours ago