அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் தொடங்கியது.
தேர்தலுக்கு முன்னதாக அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 விவாதங்கள் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு முதல் விவாதம் ஓஹியோவில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் ஆரம்பமே அனல் பறக்கும் விமர்சனங்களை எல்லாம் ஜோ பிடன் முன்வைத்தார். டிரம்பின் தவறான கையாளும் திறனால் அமெரிக்காவில் 2.05 லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டனர் என்றும் இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள முடியாமல் போராடுகிறார்கள் என்று விளாசினார் ஜோபிடன்.
கொரோனா வைரஸ் குறித்து ஜோ பிடன், டிரம்பை விமர்சித்து வந்தார். அப்போது அவர் கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தினால் கொரோனா வராது என்று டிரம்ப் ஒரு முறைகூறியிருந்ததை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதற்கு டிரம்ப் அதை நான் கேலிக்காகத்தான் சொன்னேன் என்று மறுமொழி கூறிய நிலையில் நீங்கள் டெலாவேர் மாகாணத்துக்கு செல்லுங்கள். ஆனால் நீங்கள் படித்த கல்லூரியின் பெயரை மறந்துவிட்டீர்கள். இனி ஸ்மார்ட் என்ற வார்த்தையை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள் என டிரம்பும் பதிலுக்கு பதில் விமர்சித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…