ஃபைசர் – பயோன்டெக் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதல் முதலாக 90 வயது மூதாட்டிக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்தவகையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் அமெரிக்காவின் ஃபைசர் – பயோன்டெக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுவந்தது. அந்த தடுப்பு மருந்து 95 சதவீதம் பயனளிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, அந்த தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் நாடு அரசு அனுமதி வழங்கி, இன்னும் ஒரு சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசியை போடும் பணி பிரிட்டனில் தற்பொழுது தொடங்கியது. இந்த தடுப்பூசியை முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 90 வயது மூதாட்டிக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…