ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி – யின் முதல் தொகுதியை பொது மக்களுக்கான சிவில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் சுகாதார அமைச்சின் கமலேயா தேசிய தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘காம்-கோவிட்_வெக்’ என்பதனை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ‘ ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியாக சுகாதார அமைச்சகம் பதிவு செய்தது. இந்த நிலையில் ரோஸ் டிராவ்னாட்ஸரின் ஆய்வகத்தில் நடந்த பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் தடுப்பூசியின் முதல் தொகுதியை பொது மக்களுக்கான புழக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ரஷ்ய தலைநகரில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை போடுவார்கள் என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் ஞாயிற்றுக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியை நாட்டிலுள்ள பிராந்தியங்களுக்கு எதிர்காலத்தில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…