தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாளாகும். இந்த புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் அனைத்து தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன் கொண்டாடபடும் முக்கிய திருநாளாகும்.
இந்த திருநாளின் முதல்நாள் வீடு வாசலை சுத்தம் செய்து புத்தாண்டு காலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, ஆகியவை பூஜையில் வைத்து வழிபாடு செய்வார்கள்.
புத்தாண்டு காலையில் குளித்து விட்டு வாசலுக்கு கோலமிட்டு புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். புத்தாண்டு அன்று வீட்டில் பலகாரங்களை செய்து புத்தாண்டு தினத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுப்பது வழக்கம்.
புத்தாண்டு தினத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் என்று சொல்ல படுகிறது.
புத்தாண்டு தினத்தில் போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல் , யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து பாரம்பரிய இலங்கையில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…