76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?

Published by
Rebekal
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் ப்ளூ மூன் தோன்ற உள்ளது.
சாதாரணமாகவே மனிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் இயற்கை என்பது அதிசயம் தான். அதுவும் வானத்தில் தோன்றக் கூடிய நட்சத்திரங்களை கூட சில நேரம் பார்த்து ரசிக்க கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்திரன் அல்லது சூரியன் சிலசமயங்களில் தங்களது தகவமைப்புகள் மாற்றிக் கொள்ளும் பொழுது ஏற்படக் கூடிய அதிசய நிகழ்வு பல வருடங்களுக்கு ஒரு முறையோ, வருடங்களுக்கு ஒரு முறையோ ஏற்படும். அவ்வாறு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை ரசிக்காதவர்கள் உலகில் ஒருவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல வருகிற அக்டோபர் 31ஆம் தேதி, அதாவது நாளை வானத்தில் ஒரு அரிய நிகழ்வு ஏற்பட இருக்கிறது.
ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவில் காட்டக்கூடிய நீல நிலவு வானத்தில் நாளை ஒளிர உள்ளது. ஒவ்வொரு மாதமும் தோன்றக்கூடிய பௌர்ணமி போல இருந்தாலும் இந்த நிலவு சுற்றிலும் நீல நிறமாக காட்சியளிக்கும். இது கடைசியாக 1944 ஆம் ஆண்டு உலகின் எல்லா இடத்திலும் காணப்பட்டது. அதற்குப் பிறகு 76 ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டில் இந்த அரிய நிகழ்வு தற்போது நிகழவுள்ளது. வானில் தோன்றும் கூடிய சில அதிசயங்கள் ஒவ்வொரு இடங்களுக்கு தெரிவதில்லை, ஒரு சில இடங்களுக்கு மட்டுமே தெரியும் ஆனால் இந்த ப்ளூ மூன் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இடங்களுக்கும் இரவு நேரங்களில் தெரியும் எனக் கூறப்படுகிறது. இந்த நீல நிலவு சந்திர சுழற்சியினால் ஏற்படுகிறது எனக் கூறுகின்றனர். இது இந்தியாவில் உள்ள நமக்கு இரவு 8 மணிக்கு மேல் தெரியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பின் மூலமாக தெரிவித்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

10 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

11 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

12 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

13 hours ago