ஓ மண பெண்ணே திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் சுந்தர் ரீமேக் செய்கிறார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்ததை தொடர்ந்து தற்போது அந்த பாடலை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பாடல் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…