திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்ட்ரை சூர்யா ரசிகர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வழக்கமாக போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட மதுரையில் தளபதி ரசிகர்கள் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று சித்தரித்தும், மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரையரங்குகள் திறப்பது குறித்தும் போஸ்ட்ர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதே போன்று அஜித் ரசிகர்களும் தியேட்டரில் வலிமை படம் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் பார்க்க மாட்டோம் என்று கூறி போஸ்ட்ர்களை ஒட்டினர்.
இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களும் சூர்யாவை அரசியலில் களமிறங்க கோரி போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் சூர்யாவை சேகுவாரா போல சித்தரித்து தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் இடம்பெற செய்து ‘திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்ட்ர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…