ரைஸ் குக்கரை திருமணம் செய்து, 4 நாட்களில் விவாகரத்து செய்த நபர்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Published by
லீனா

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்துள்ளார். 

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்தது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஆடம்பரமான திருமண உடை அணிந்திருந்தார். பிலிப்ஸ் அரிசி குக்கர் மணமகளின் முக்காடு அணிந்திருந்தது. ஒரு படத்தில், மணமகனும், மணமகளும் ஒன்றாக தோற்றமளிப்பதையும், மற்றொரு படத்தில், திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களில் அனாம் கையொப்பமிடுவது போலவும் புகைப்படம் உள்ளது. அவர் மற்றொரு படத்தில் தனது மணப்பெண்ணை முத்தமிடுவதையும் காணலாம்.

இதுகுறித்து அனாம் கூறுகையில், வெள்ளையான, அமைதியான, சரியான, அதிகம் பேசாத ஒன்று. சமையலில் நல்லது, நீங்கள் இல்லாமல் அரிசி சமைக்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், 4 நாட்களுக்குப் பிறகு தனது ‘மனைவியை’ ‘விவாகரத்து’ செய்ததாக அனாம் அறிவித்ததால் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

பிரிவுக்குப் பின்னால் உள்ள காரணம் குறித்து அவர் கூறுகையில், அவள் அரிசி சமைப்பதில் வல்லவள். ஆனால் வேறு எந்த உணவுகளையும் செய்வதில் வல்லவள் அல்ல என கூறியுள்ளார். திருமணம் மற்றும் விவாகரத்து எல்லாம் ஒரு நகைச்சுவையாக இருந்தது மற்றும் அந்த நபர் சமூக வலைத்தளங்களில் விளம்பரத்தைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

6 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

11 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

12 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

12 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

15 hours ago