பிலிப்பைன்ஸின் மணிலா விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனெடாவுக்கு பதிவு எண் RP-C5880 ஐக் கொண்ட ஒரு ஜெட் விமானம் இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக ஒரு நோயாளியை அழைத்து செல்ல இருந்தது.
இந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது தீப்பிடித்து வெடித்தது. இதையெடுத்து தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விமானத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு நோயாளி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். விமானத்தில் இருந்த நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா..? என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
மணிலா சர்வதேச விமான நிலைய ஆணையம் சார்பில் வெளியான தகவல் படி எந்த பயணிகளும் தப்பவில்லை என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பிலிப்பைன்ஸில் இதுவரை கொரோனாவால் 1,418 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயால் இதுவரை 71 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெட் விமானம் பிலிப்பைன்ஸ் தீவுகளைச் சுற்றி மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.மேலும் இந்த வார தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறையின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது.அதில் சுகாதார அதிகாரிகள் விமானத்தில் மருத்துவ பொருட்களை ஏற்றுவதைக் காட்டியது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…