முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை – இலங்கை அரசு உத்தரவு..!

Published by
Edison

இலங்கையில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும் சூழல் ஆரம்ப காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்தான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.இந்த காரணத்தை வைத்து, இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாக தடை செய்யப்படிருந்தது.

இதனையடுத்து,புர்கா அணிவதை நிரந்தரமாக தடை செய்வது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.மேலும்,இந்த ஆடை நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது,நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லீம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago