முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை – இலங்கை அரசு உத்தரவு..!

Published by
Edison

இலங்கையில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும் சூழல் ஆரம்ப காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்தான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.இந்த காரணத்தை வைத்து, இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாக தடை செய்யப்படிருந்தது.

இதனையடுத்து,புர்கா அணிவதை நிரந்தரமாக தடை செய்வது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.மேலும்,இந்த ஆடை நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது,நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லீம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago