பயணத்தால் வந்த சோதனை.? மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா.?

Published by
பாலா கலியமூர்த்தி

உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 1,604,736 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 95,735 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 356,671 பேர் குணமடைந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் சாதாரணவர்கள் முதல் உலக தலைவர்களள் வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அரசர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அந்த வரிசையில் சவுதி அரேபிய மன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வந்துள்ளது. தலைநகர் ரியாத்தின் ஆளுநரும், இளவரசருமான 70 வயதுடைய பைசல் பின் பந்தர் பின் ஆஸிஸீக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியதால் அரசர் சல்மான் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

அரச குடும்பத்தில் மேலும் பலருக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக சிறப்பு மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது. இளவரசர்கள் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,287 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 44 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago