Minister Ponmudi [File Image ]
செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டது. அதன்படி, அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் கடந்த 8ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, வழக்கு தொடர்பாக ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. ஆனால், செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…