ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸானது, இன்று உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆட்டி படைத்தது வருகிறது. இந்த வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரேசிலை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனா தொற்று பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆயின் ஆய்வாய் நடத்திய விஞ்ஞானி ரபேல் கைடோ இதுகுறித்து கூறுகையில், ஜரரகுசு பிட் வைபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரசில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், அதே நேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால், ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்து உள்ளார்.
இந்த பாம்பானது, 6 அடி (2 மீட்டர்) நீளம் கொண்டது. பிரேசிலின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்று ஜரராகுசு. இது கடலோர அட்லாண்டிக் காட்டில் வாழ்கிறது. மற்றும் பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜென்டினாவிலும் காணப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…