கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை 49 பயணிகள் மற்றும் 3 விமான குழு உறுப்பினர்கள் கொண்ட டாஷ் 8-300 என்ற ஏர் கனடா விமானம் மாண்ட்ரீல் -ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து சாகுவேனுக்கு புறப்பட்டுச் சென்றது.
அப்போது விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போது விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதன் காரணமாக விமானம் மேல பறக்க முயன்றபோது விமானத்திலிருந்த ஒரு சக்கரம் கழண்டு கீழே விழுந்தது.
பிறகு விமானத்தை தொடர்ந்து பறந்து சென்ற பிறகு மீண்டும் டாஷ் 8-300 என்ற விமானம் மாண்ட்ரீல் -ட்ரூடோ விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து அந்த ஏர் கனடா நிறுவனம் கூறுகையில், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சமாளிக்க விமானிகளுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அவரச வாகனங்கள் கொண்டுவரப்பட்டு இருந்தது. விமானத்தில் ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிந்து பின்னர் அதற்குரிய பழுது பார்க்கப்படும் என கூறியுள்ளது.
இதையடுத்து பயணிகள் மற்றொரு விமானம் மூலம் திட்டமிட்டபடி சாகுவேனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…