அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் தனது கணவனுடன் 38 வயதுடைய பெண் சண்டையிட்டு அடிதடியில் இறங்கியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பெண் செரி சாண்டர்ஸீடம் கணவனை தாக்கியது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.அப்போது போதையில் இருந்த அந்த பெண் காவல்துறையினரை மிரட்டியதுடன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவருக்கு கைவிலங்கு போட முயற்சி செய்துள்ளனர்.அப்போது அந்த பெண்மணி அவர்களை காலால் உதைத்துடன் சத்தம் போடவும் தொடங்கியுள்ளார்.
பின்னர் அவரை பிடித்த காவல்துறையினர் கைவிலங்கிட முயற்சி செய்யும் போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவரின் காலை கடுமையாக கடித்து குதறியுள்ளார்.அந்த பெண்ணிடம் சிக்கிய காவல்துறையினரின் காலை மற்ற காவல்துறையினர் கஷ்டப்பட்டு மீட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த காவல்துறையினரின் காலில் சுமார் 2 இன்ஜி ஆழத்திற்கு பல் பதிந்துள்ளது.அவர் சிறுது நேரத்தில் மயங்கி கீழே விழ சக காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அளைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் மீது குடும்ப தகராருடன் காவல்துறையினரை தாக்கியது மற்றும் கைது செய்ய வந்த காவல்துறையினரை தாக்கி கடித்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…