‘உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது’ – எச்சரிக்கை விடுக்கும் WHO…!

Published by
லீனா

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ் ஆனது தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின், டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அவர்கள், டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வகை வைரஸ் உலகில் 98 நாடுகளில் பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வகை வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ள இரண்டு வழிகளை கூறியுள்ளார். அதன்படி,

  • பொது சுகாதாரம், ஆரம்ப தொற்று பாதிப்பை கண்டறிதல், மருத்துவ பராமரிப்பு போன்றவை முக்கியமானவை. முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டமான இடங்களுக்கு செல்லாதிருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
  • ஆக்சிஜன், சோதனை கருவிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை உலக நாடுகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு இந்த நேரத்தில், ஒவ்வொரு நாட்டிலும் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா
Tags: #CoronaWHO

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

50 minutes ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

60 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago