கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை..!

Published by
Sharmi

அண்டார்டிகாவில், இந்தியாவில் உள்ள டெல்லி நகரத்தை போன்று 3 மடங்கு அதிகமுள்ள பனிப்பாறை கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு ஒருவித அச்சம் தோன்றியுள்ளது.

உலகில் உள்ள பனிப்பாறைகள் பூமி வெப்பமாவதை தடுக்கிறது. அதன்படி பூமியின் தெற்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் அதிமான அளவில் சூழ்ந்துள்ளது. பனிப்பாறைகள் உருகினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பல நகரங்கள், நிலப்பகுதிகள் கடலினுள் மூழ்கும் அபாயம் உள்ளது.

தற்போது, நடைபெறும் காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்து அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை ஒன்று உருகி கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதற்கு முன் கடந்த வருடத்திலும் ஏ-68 என்ற பனிப்பாறை ஒன்று கடலில் உருகி சிறு சிறு துண்டுகளாக கரைந்தது. தற்போது மீண்டும் அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை கடலில் மிதப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பனிப்பாறைக்கு விஞ்ஞானிகள் ஏ-76 என்று பெயரிட்டுள்ளனர். மேலும், 4320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள இந்த பனிப்பாறை, கிட்டத்தட்ட டெல்லி நகரத்தை போன்று 3மடங்கு அதிகம் என்று கணித்துள்ளனர். மேலும், 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் உள்ள இந்த பனிப்பாறை வெடல் கடலில் தற்போது மிதக்கிறது.  இதனால் கடல்நீர் உயரும் அச்சத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் உள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 minutes ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

50 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

1 hour ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago