“என்னை விட “தேசபக்தி” உடையவர்கள் யாரும் கிடையாது” மீண்டும் முகக் கவசம் அணிந்த ட்ரம்ப்!

Published by
Surya

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “என்னை விட தேசபக்தி உடையவர்கள் யாரும் கிடையாது என தெரிவித்தார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அந்தவகையில், கொரோனா அதிகமாக பாதித்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம், மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா பரிசோதனையே காரணம் என கடந்த ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸை “சீனா வைரஸ்” என அவர்கூறி வருவது, மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

அதுமட்டுமின்றி அதிபர் ட்ரம்ப் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியமாட்டார். மேலும், மக்களை முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தமாட்டேன் என கூறியது, மேலும் சர்ச்சை கிளப்பியது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ மருத்துவமனைக்கு ட்ரம்ப் சென்றார். அப்பொழுது அவர் முதல் முதலாக முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனை பார்த்த மக்கள், அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு, அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணிந்ததாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தான் இரண்டாம் முறையாக முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “என்னை விட தேசபக்தி உடையவர்கள் யாரும் கிடையாது” என அந்த பதிவில் தெரிவித்தார்.

அந்த பதிவில் அவர், “கண்ணுக்கு தெரியாத சீன வைரஸை (கொரோனா வைரஸ்) அளிப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத சூழலில் போது முகக்கவசம் அணிவது தேசபக்தி என சிலர் கூறுகிறார்கள்” எனவும், “என்னை விட தேசபக்தி உடையவர் யாரும் கிடையாது எனவும், உங்களுக்கு பிடித்த அதிபர்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago