தினம் ஒரு திருப்பாவை

Published by
kavitha
  • மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
  • பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம்

திருப்பாவை

பாடல் : 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும்

மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;

மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

‘மாமாயன் மாதவன் வைகுந்த’  னென்றென்று

நாமம் பலவும் நவின்றலோ ரெம்பாவாய்.

– ஸ்ரீ ஆண்டாள்-

பாடல் விளக்கம்:

தூய  மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் எரியவும்,அகில் முதலியவற்றின் புகை மணக்கவும்,தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையில் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகள் இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை ஆதலால் அவள் தாயை எழுப்ப வந்தவர்களின் மாமியை அழைத்து,அவளை எழுப்பும் படி  வேண்டுகின்றனர்) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாதலால் ஊமையோ? அல்லது செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கிறளோ? மாமாயனே,மாதவனே! வைகுந்தனே! என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை;அவளை எழுப்ப மாட்டீர்களோ? என்று ஆண்டாள் இயற்றி உள்ளார்.

 

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago