சேரனின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை பற்றி தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.
ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்கி நடித்து தேசிய விருது பெற்றவர் சேரன். தன்னுடைய படங்களின் மூலம் பெண் கதாபாத்திரங்களை மென்மையாக காண்பித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். அதனையடுத்து பட வாய்ப்புகள் வராத நிலையில், தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு பிரபலமானார். ஆம் ரசிகர்கள் அனைவராலும் தற்போது சேரப்பா என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.அதன் பிறகு, கடந்தாண்டு இவரது இயக்கத்தில் வெளியான திருமணம் என்னும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆட்டோகிராப் படத்தை குறித்து மறக்க முடியாத சம்பவத்தை கூறியுள்ளார் சேரன்.2004ல் சேரன் இயக்கி வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இதில் கோபிகா, சினேகா, மல்லிகா பலர் சேரனுடன்நடித்திருந்தார்கள் . இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் சென்னையிலுள்ள தேவி பாரடைஸ் தியேட்டரில் 2004ல் ஆட்டோகிராப் படத்தின் டிக்கெட்டை பகிர்ந்தார். அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த சேரன், இந்த டிக்கெட்டின் கதை, முதலில் தேவி கலாவில்(சிறிய தியேட்டர்) மட்டுமே திரையிட அனுமதி கிடைத்தது.
இரண்டாவது வாரம் தேவிபாலாவிலும் இடம் கிடைத்தது. மூன்றாவது வாரம் தேவி பாரடைஸ் (பெரிய தியேட்டர்)ம் சேர்ந்து மூன்றிலும் படம் ஓடியது. நான்காவது வாரம் முதல் தேவியிலும் திரையிட்டார்கள். நான்கு திரையரங்கிலும் ஆட்டோகிராப் மட்டுமே மூன்று வாரங்கள் ஓடியது. பின்னர் ஒவ்வொன்றாக குறைத்து 100நாட்களுக்கு மேல் ஓடியது. சிட்டியில் ஆட்டோகிராப் திரையிட்ட நிறைய திரையரங்குகள் இதே முறையை பின்பற்றின. அது ஒரு மறக்க முடியாத சம்பவம் என் வாழ்வில் என்று சேரன் கூறியுள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…