இத்தாலியில் “நார்டோஸ்” எனும் நகரில் இரண்டு பேர் மட்டும் வசிக்கும் நிலையில், அவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வருகின்றனர்.
இத்தாலியில் கொரோனா தொற்றால் இதுவரை 3.9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 36,427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள “நார்டோஸ்” எனும் நகரில் 82 மற்றும் 74 வயதுடைய இரண்டு குடியிருப்பு வாசிகள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.
அதில் குடியிருப்புவாசி ஒருவர் கூறியதாவது, “எனக்கு கொரோனா வைரஸை நினைத்தால் பயமாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், யார் என்னைக் கவனிப்பார்கள்? என்னை நானே பார்த்துகிற வேண்டும்” என்று கூறினார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…