BiggBoss7 [file image]
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அதன் 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது, வீட்டிற்குள் நடக்கும் புதிய சுவாரஸ்யமான நகர்வுகள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 10 வது வாரத்தில், தற்போதைய 17 போட்டியாளர்களில் மொத்தம் எலிமினேஷனுக்கு ஐந்து போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா விஜயகுமார் வெளியேறினார். இதற்குப் பிறகு, இந்த வார நாமினேஷன் டாஸ்க் பார்வையாளர்களை பெரிதும் கவரவில்லை என்று தெரிகிறது. வரவிருக்கும் நாட்களில் தற்போதைய வாக்குப்பதிவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும் என்று தெரிந்தவுடன் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது.
காரணம், கனமழை காரணமாக சென்னை மாநகரமே குடிக்க தண்ணீர் மற்றும் உணவு இல்லாமலும் தவித்து வருகிறது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த வகையில், பிக்பாஸ் வீடு என்ன நிலமையில் இருக்கிறது என சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்ப, சென்னை மக்கள் எலிமினேஷனுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது.
தப்பை ஒத்துக் கொள்கிறேன் ஆனா வருத்தப்பட மாட்டேன்! பிக் பாஸ் ஜோவிகா எழுதிய கடிதம்!
இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின்படி, மிக்ஜாம் புயலின் காரணமாக, பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வார நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, தினேஷ் கோபால்சாமி, மணிச்சந்திரா, நிக்சன் மற்றும் விசித்ரா ஆகியோர் உள்ளனர். இதில் விஜே அர்ச்சனா அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளார், மேலும் விசித்ரா மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில், இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வாக்களிப்பு முடிவுகலில் தொடர்ந்து 10 வாரமாக அர்ச்சனா முன்னிலை வகித்து வருகிறார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…