தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனிவரும் காலங்களில் உயிரிழக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன்

Published by
லீனா

அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸ்  பாதிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகிறது.

இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றான ஓமைக்ரான் தொற்றும் அங்கு பரவி வருகிறது. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  இன்று இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனிவரும் குளிர்காலங்களில் உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி எடுத்துக் கொண்டால்தான் நாம் நமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும், நாம் நமது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago