மேற்கு சீனாவில் ஓடுபாதையில் இருந்து டிவி9833 என்ற விமானம் திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படவிருந்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திபெத் ஏர்லைன்ஸ் விமானம் சீனாவில் இருந்து திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படவிருந்தபோது சற்று முன்னர் ஓடுபாதையில் இருந்து இருந்து விலகிய நிலையில் விமானத்தின் இடது பக்கத்தில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.இதனால்,விமானம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,உடனே விமானத்தின் பின்பக்க கதவில் உள்ள ஒரு வெளியேற்ற ஸ்லைடு வழியாக மக்கள் தப்பி விமானத்திலிருந்து இருந்து இறங்கி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.அதன்படி,113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றும்,சிலர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,இதனையடுத்து,தீ அணைக்கப்பட்டு ஓடுபாதை மூடப்பட்டதாகவும்,தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…