சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் அறிமுகம்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிமுகம் செய்வது தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டப்படி சொன்ன தேதியில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.
தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு தகவல்:
தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி போல்டு 2 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான அறிமுக செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அறிமுக செய்வதில் மாற்றம் ஏதும் இருக்காது என்ற போதும், இது ஆன்லைன் மூலம் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரியஸின் சிறப்பு:
சாம்சங் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடல் கீக்பென்ச் தளத்தில் SM-N986U என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது தெரியவந்தது. மேலும் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் என்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.99,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…