பாகிஸ்தானில் டிண்டர் செயலிக்கு தடை..! பி.டி.ஏ அதிரடி..!

Published by
murugan

ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் டிண்டர் மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட பல டேட்டிங் செயலிகளை  பாகிஸ்தான் தடை செய்துள்ளது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இந்தோனேசிய ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் சமீபத்தில் நடத்திய ஆய்வில், டிண்டர் மூலம் நாட்டில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் டிண்டர் பயனர்களில் பெரும்பாலோர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து வந்தவர்கள், பொதுவாக 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  மற்ற டேட்டிங் பயன்பாடுகளும் பாகிஸ்தானில் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் டேட்டிங் சந்தையில் Bumble ஆப் புதியதாக இருந்தாலும், பல பாகிஸ்தான் பெண்களுக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் பெண்கள் அதிகமாக பயன்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ)  ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” காரணங்களை கொண்டு டேட்டிங் செயலிகளை நீக்க கோரி டிண்டர், கிரைண்டர், டேக், ஸ்கவுட் மற்றும் சேஹி ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், பி.டி.ஏ அனுப்பிய நோட்டீஸிக்கு எந்த  நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.

இதனால், டின்டர் உள்ளிட்ட  டேட்டிங் பயன்பாடுகளை சட்டவிரோதமாகவும், ஆபாசமாக இருப்பதாக கூறி பாகிஸ்தான் தடை செய்தது. பாகிஸ்தான் இதே போன்ற காரணங்களுக்காக சமீபத்தில் யூடியூப்பை தடை செய்ய இருப்பதாக அச்சுறுத்திய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ​​தெற்காசியாவில் ஆன்லைன் டேட்டிங் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே லைவ் ஸ்ட்ரீமிங் பிகோ மற்றும் ஆன்லைன் கேமிங் பயன்பாடு PUBG ஐ தடை செய்துள்ளது. டிக்டாக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago