பாகிஸ்தானில் டிண்டர் செயலிக்கு தடை..! பி.டி.ஏ அதிரடி..!

Published by
murugan

ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் டிண்டர் மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட பல டேட்டிங் செயலிகளை  பாகிஸ்தான் தடை செய்துள்ளது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இந்தோனேசிய ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் சமீபத்தில் நடத்திய ஆய்வில், டிண்டர் மூலம் நாட்டில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் டிண்டர் பயனர்களில் பெரும்பாலோர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து வந்தவர்கள், பொதுவாக 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  மற்ற டேட்டிங் பயன்பாடுகளும் பாகிஸ்தானில் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் டேட்டிங் சந்தையில் Bumble ஆப் புதியதாக இருந்தாலும், பல பாகிஸ்தான் பெண்களுக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் பெண்கள் அதிகமாக பயன்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ)  ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” காரணங்களை கொண்டு டேட்டிங் செயலிகளை நீக்க கோரி டிண்டர், கிரைண்டர், டேக், ஸ்கவுட் மற்றும் சேஹி ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், பி.டி.ஏ அனுப்பிய நோட்டீஸிக்கு எந்த  நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.

இதனால், டின்டர் உள்ளிட்ட  டேட்டிங் பயன்பாடுகளை சட்டவிரோதமாகவும், ஆபாசமாக இருப்பதாக கூறி பாகிஸ்தான் தடை செய்தது. பாகிஸ்தான் இதே போன்ற காரணங்களுக்காக சமீபத்தில் யூடியூப்பை தடை செய்ய இருப்பதாக அச்சுறுத்திய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ​​தெற்காசியாவில் ஆன்லைன் டேட்டிங் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே லைவ் ஸ்ட்ரீமிங் பிகோ மற்றும் ஆன்லைன் கேமிங் பயன்பாடு PUBG ஐ தடை செய்துள்ளது. டிக்டாக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

10 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

11 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…

11 hours ago

கொரோனா பரவல்: ”கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை.!

சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…

12 hours ago

அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…

12 hours ago

ஒரே ஒரு ஆட்டோ மாசம் ஓஹோ சம்பாத்தியம்.., லட்சம் வருமானம் பார்க்கும் ஓட்டுநர்.! அப்படி என்ன செய்கிறார்?

மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…

13 hours ago