சுற்றுலா செல்வது சிலர் வீண் செலவாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த செலவு வீண் செலவல்ல. அது தேவையான ஒரு செலவுதான். நீங்கள் சுற்றி பார்க்கவோ அல்லது கோவில்களுக்கு சென்று சுற்றி பார்ப்பதற்காக பணத்தை சேமிப்பது நல்லது. நீங்கள் செல்லும் இடங்களுக்கு முன்பதிவு செய்து பயணசீட்டு பெற்று விடுங்கள். மேலும், ரயிலாக இருந்தால் எந்த இருக்கை என்பதையும் பஸ் என்றால் நேரத்தையும் சரியாக தெரிந்து கொண்டு அனைவரும் சென்று ஏறுங்கள். மேலும் அனைத்து விவரங்களையும் செல்லும் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் நீங்கள் செல்லும் இடங்களுக்கு என்னென்ன பொருட்கள் வேண்டும், பின்னர் சென்ற இடங்களில் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் பட்டியல் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் செல்லும் இடங்களில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அதற்கான தகவல், செல்ல கூடிய வழி போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
சுற்றுலாவிற்கு செல்லும் பொழுது உங்களுக்கு தேவையான ஆடைகள், சோப்பு, பவுடர், பொட்டு என அவசியமான அனைத்தையும் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் இடங்களில் இவற்றை வாங்குவது கடினம். சுற்றுலா செல்லும் பொழுது கையில் தேவையான பணத்தை மட்டும் வைத்து கொள்ளுங்கள். ஏ.டி.எம். கார்டை எப்போதும் வைத்திருங்கள். மேலும், உங்களது முக்கிய அடையாள அட்டைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். சுற்றுலாவிற்கு விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். எளிமையான நகை அணிவது நல்லது. மேலும், உங்கள் வீட்டில் விலையுயர்ந்த தங்க நகை, வைர நகை இருந்தால் அதனை வங்கி பெட்டியில் வைத்து விட்டு போவது நன்மை தரும். மேலும், நெடுதூர பயணம் என்றால் வீட்டிலேயே சாப்பாடு செய்து எடுத்து செல்வது சுகாதாரமானது. உங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்து செல்லுங்கள்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…