இன்றைய (05.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வது முக்கியம். கவலைப்படுவதையும் உணர்ச்சி வசப்படுதலையும் இன்று தவிர்க்க வேண்டும். இன்று வேலைப் பளு அதிகமாகக் காணப்படும்.

ரிஷபம்: இன்று நீங்கள் மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். இன்று கவனக்குறைவு ஏற்படலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். நீங்கள் செய்யும் செயலை சரியாக முடிப்பீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இன்று வேலையில் முன்னேற்றம் காணப்படுகின்றது.

கடகம் : இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். முன்னேற்றமும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இன்று பணியிடத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்: இன்று யதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய எதிர்பார்ப்புகளுடன் செயலாற்றாதீர்கள். ஏமாற்றங்கள் ஏற்படலாம். இன்று அதிக பணிச்சுமை காரணமாக பணியை திறம்பட செய்வதில் சில தடைகள் இருக்கும்.

கன்னி: இன்று நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதி பெறலாம். சவால்களை எதிர்கொள்ளும் நாள். 

துலாம்: இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்கள கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம்: இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இன்றைய நாளில் நீங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இன்று மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.

தனுசு: இன்று சில அசௌகரியங்கள் ஏற்படலாம். பொறுமையும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். 

மகரம்: இன்று யதார்த்தமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் காரியங்களை மேற்கொள்வதில் சில தடைகள் நேரலாம். அனுசரித்து போவதன் மூலம் திறம்பட பணியாற்ற முடியும்.

கும்பம்: இன்று மகிழ்ச்சியான மன நிலை இருக்கும். உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவீர்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மை கிட்டும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள்.

மீனம்: இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்களையே தரும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். இன்று நண்பர்கள் கூட உங்கள் விரோதிகளாக மாற வாய்ப்புண்டு.

Published by
பால முருகன்

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

38 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

59 minutes ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago