இன்று சர்வதேச யோகா தினம்.
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா பொதுச்சபையில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், சர்வதேச யோகா நாளாக ஒரு நாளை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.
இதற்காக அவர், ஜூன் 21-ஆம் நாளை பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல நாடுகள் ஆதரித்தன. இந்நிலையில் 2014-டிசம்பர் 11ஆம் தேதியன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 21 ஆம் நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்திய தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமை வகித்து நடத்தினார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…