இன்று சர்வதேச யோகா தினம்.
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா பொதுச்சபையில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், சர்வதேச யோகா நாளாக ஒரு நாளை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.
இதற்காக அவர், ஜூன் 21-ஆம் நாளை பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல நாடுகள் ஆதரித்தன. இந்நிலையில் 2014-டிசம்பர் 11ஆம் தேதியன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 21 ஆம் நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்திய தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமை வகித்து நடத்தினார்.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…