விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பங்கா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் பகத்சிங். இவர் சிறு வயதிலேயே கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் என அடிக்கடி கூறுவாராம். அவருக்கு 12 வயது இருக்கும் பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. மேலும், 1928-ம் ஆண்டு சைமன் குழு இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அவர்கள் அமைதிப் பேரணி நடத்தினார்.
இந்த பேரணியில் பகத்சிங் கலந்து கொண்டுள்ளார். புரட்சி ஓங்குக எனும் சொல்லை தனது தாரக மந்திரமாக கொண்டிருந்த இவர், போராட்டங்களில் கலந்து கொண்டதன் மூலமாக சிறை சென்றுள்ளார். அப்பொழுது துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளது.
சிறையில் இருந்த போதே பல நூல்களைப் படித்த இவர் சில நூல்களையும் எழுதியுள்ளார். இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலை போராட்ட இயக்கத்தில் பங்கு பெற செய்த இளம் மாவீரன் பகத் சிங், ஆங்கிலேயர்களை எதிர்த்து பல பிராணிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சிறை கைதிகளுக்கு சம உரிமை கோரி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதால் லாலா லஜபதிராய் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கு காரணமாயிருந்த காவலர் ஒருவரை பகத்சிங் சுட்டு கொன்றுள்ளார். இந்த குற்றத்துக்காக தனது 24 வது வயதில் 1931 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார். விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…