இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் இன்று….!

Published by
Rebekal

இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று அனல் பறக்க பேசிய வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த புரட்சி வீரர் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதிக அளவு ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தனக்கு சரியான குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கும் சில பிரச்சினை காரணமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின் எஸ்.ஆர்.தாஸ் உதவியுடன் மற்றொரு கல்லூரியில் சேர்ந்து ஐசிஎஸ் பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் நாம் வேலை பார்க்கக் கூடாது எனும் எண்ணத்தில் லண்டனில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு 1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் எனும் ரேடியோ மையத்தை நிறுவி நாட்டுக்கு எனத் தனிக் கொடி ஒன்றை அமைத்து, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

அதன் பின் பல இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பெண்களுக்கென தனிப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு ஜான்சிராணி படை எனப் பெயரிட்டு, பலராலும் பாராட்டப்பட கூடிய ஒரு விடுதலைப் போராட்ட வீரராக இருந்துள்ளார். அதன் பின்னதாக 1941 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இரவு முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர் மாறுவேடத்தில் தப்பிச் சென்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் மறைந்தார். பின் 1992 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்த பாரத ரத்னா விருது திரும்ப பெறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago