பாகிஸ்தானில் பேருந்து-ரயில் மோதிய விபத்தில் சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான், நான்கானா சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியாக சீக்கிய யாத்ரிகர்கள் ஒரு பேருந்தில் வந்துக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்து பாரூகாபாத் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடந்து சென்றபோது, கராச்சியிலிருந்து லாகூரை நோக்கி சென்ற ஷா ஹுசைன் எக்ஸ்பிரஸ், அந்த பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த பேருந்தின் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். மேலும், 9 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அவர்களை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்த ஒன்பது பேரில், ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்த விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…