அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக மாநில செனட்டராக திருநங்கை தேர்வு.!

Published by
Ragi

டெலாவேர் மாநில செனட்டிற்கான தேர்தலில் திருநங்கைகளின் ஆர்வலரான சாரா மெக்பிரைட் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், டெலாவேரின் முதல் செனட் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த குடியரசு கட்சியின் ஸ்டீவ் வாஷிங்டனை சாரா தோற்கடித்தார். கல்லூரியில் படிக்கும் போது சாரா, ஒபாமா நிர்வாகத்துடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முதல் திருநங்கை என்ற சிறப்பை பெற்றதுடன், 2016-ல் ஒரு பெரிய அரசியல் மாநாட்டில் பேசிய முதல் திருநங்கை என்ற சிறப்பையும் சாரா பெற்றார்.

தற்போது, அமெரிக்காவின் மாநில செனட்டராக வெற்றி பெற்றுள்ளார். இது அமெரிக்கா வரலாற்றில் ஒரு மாநில செனட்டர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சிறப்பை சாரா மெக்பிரைட் பெற்றுள்ளார்.

இவரது வெற்றி குறித்து மனித உரிமைகள் பிரச்சாரத்தின் தலைவர் அல்போன்சா டேவிட் கூறுகையில், மெக்பிரைட் அவருக்காக மட்டுமில்லாமல் நம் முழு சமூகத்திற்கும் வரலாற்றை உருவாக்கியுள்ளார் என்றும், அவரது இந்த வெற்றி எந்தவொரு நபரும் தங்கள் பாலின அடையாளத்தை அல்லது பாலியல் நோக்குநிலையை பொருட்படுத்தாமல் அவர்களின் கனவை அடைய முடியும் என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago