டிரம்ப் நிர்வாகம் புதிய நிர்வாகத்திற்கு முழுமையான தகவல்களை வழங்க மறுக்கிறது – ஜோ பைடன் குற்றசாட்டு!

Published by
Rebekal

பல்வேறு துறைகளில் ட்ரம்பின் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டிரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர் ஏற்கனவே ட்ரம்பின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவர் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தற்பொழுது இதுகுறித்து பேசியுள்ள புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ட்ரம்ப் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாகவும், டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவின் பல்வேறு துறைகளை சீரழித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளின் புதிய நிர்வாகத்திற்கான தகவல்களை வழங்க மறுப்பது பொறுப்பற்ற செயல் எனக் கூறிய ஜோ பைடன், தங்களுக்கு அரசியல் தலைமைகளால் இடையூறு கொடுக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

மிக மோசமான நிலையில் நாட்டின் பல்வேறு துறைகள் இருப்பதாகவும், திறமையான பல ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், பல துறைகளில் அரசு சீர்கேட்டை உருவாக்கி வைத்திருப்பது விரக்தியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிரி நாடுகளை சமாளிக்க தேவையான திட்டங்களை வகுப்பதற்கு முந்தைய அமெரிக்காவின் அரசு முழுமையான தகவல்களை கொடுக்க வேண்டும், ஆனால் இதுவரை பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் குறித்த தெளிவான தகவல் கூட கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

1 hour ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

2 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

2 hours ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

2 hours ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

3 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

3 hours ago