டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம்.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,47,318 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 80,040 ஆகவும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே இந்த கொரோனா வைரஸை சீனாதான் பரப்பி விட்டதாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு வருகிறார். பின்னர் உலக சுகாதார அமைப்பை, சீனாவுக்கு ஆதரவாக இருக்கு என்று கூறி வழங்கப்படும் நிதியையும் நிறுத்தி வைப்பதாக மிரட்டல் விட்ட நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அங்குள்ள சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் தற்போது நடைபெறும் ஆட்சி மீது முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதில், உயிரிழப்பு குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா பெரும் இழப்பை சந்தித்துள்ளது. சுயநலவாதியாக நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் தற்போது அமெரிக்கா மிக பெரிய பாதிப்பை கண்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதே மறந்து ஒரு அரசாங்கம் செயல்படுகிறது. இதுபோன்ற நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றதாக இருக்கும் என நினைக்கிறன். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட போகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…