கர்ணன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கர்ணன் படம் குறித்து சமீபத்தில் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது ” படம் வெளியாகிறது இன்னும் சில நாட்களில் நான் என்ன சொல்ல..? ஆனால் படத்தை பார்த்த பிறகு அதனுடைய தாக்கம் கண்டிப்பாக இரண்டு நாட்கள் இருக்கும். கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கும். படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை செதுக்கி இருக்காரு” என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான அடுத்த பாடலும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…