கொரோனா ஊரடங்கு நெருக்கடியால் 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து விமான நிறுவனம்.
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும், இதில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையின் காரணமாக விமானிகள் உட்பட தங்களது ஊழியர்களில் பன்னிரண்டாயிரம் பெற ஆட்குறைப்பு செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்து அவர்களை தற்போது வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொழிற்சங்கங்கள் இதுகுறித்து ஆவேசம் அடைந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர். இதற்கிடையே பிரிட்டிஷ் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கும் ஆட்குறைப்பு செய்ய பரிசீலுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…