UK PM Rishi sunak [File Image]
சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின் நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார்.
அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும் நிகர இடம்பெயர்வை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வரலாற்றில் இதற்கு முன் எந்தப் பிரதமரும் இதைச் செய்ததில்லை.’ என்று ரிஷி சுனக் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை இங்கே காணலாம்…
அதிக எண்ணிக்கையிலான சார்புடையவர்கள் (இங்கிலாந்தில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் மூலமாக நாட்டிற்குள் வருபவர்கள் ) இங்கிலாந்திற்குள் நுழைவதை தடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இடம்பெயர்வதைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.’
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வருமான வரம்பு கிட்டத்தட்ட 50% அதிகரிக்கபடுகிறது. 26,200 இங்கிலாந்து பவுண்ட்டிலிருந்து 38,700 பவுண்டாக அதிகரிக்க பட்டுள்ளது. இதன் மூலம் குறைவான சம்பளத்திற்கு வெளிநாட்டில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நடைமுறை குறைக்கப்படும்.
உடல்நலம் மற்றும் பராமரிப்பு விசா (கணவர் வேலை பார்ப்பார் மனைவி அல்லது குடும்பத்தார் இங்கிலாந்தில் அவர் மூலமாக இங்கிலாந்து வருவர்), முன்பு பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இனி இங்கிலாந்திற்குள் அவ்வாறு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டாலும் அதற்கான நடைமுறை மிக கடுமையாக இருக்கும்.
UK க்கு மாணவர்களின் வரவை சமாளிப்பதற்கான ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. இந்த நடவடிக்கைகள் நிகர இடம்பெயர்வை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, செப்டம்பர் 2023 இல் முடிவடையும் ஆண்டில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் வந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1,53,000 என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…