Iran - Pakistan Conflict [File Image]
பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகினர். இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்.. 9 பேர் பலி.! விளக்கம் கேட்கும் ஈரான்.!
இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளின் எல்லைகளில் நடத்தும் இந்த தாக்குதல்கள் அடுத்த இரு நாட்டு போருக்கு வழிவகுத்து விடுமோ என்கிற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. அதனால் பிரதான உலக அரசியல் தலைவர்கள் இரு நாடுகளும் போர் பதற்ற நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் – ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இன்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்காவின் கருத்துக்களை தெரிவித்தார். சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பிலும் இரு நாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா செய்தி தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் , ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்தியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி பற்றிசெய்தியாளர்கள் கேட்கையில், மேத்யூ மில்லர், என்னிடம் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இல்லை. அரசாங்கம் கூறிய கருத்துக்களை மட்டுமே நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வியாழனன்று, பாகிஸ்தான் மற்றும் ஈரான் தாக்குதல்கள் குறித்து பேசுகையில், ஈரான் அரசு விரும்பத்தகாத செயல்களை செய்கிறது என்பதை காட்டுகிறது என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் – ஈரான் தாக்குதல் குறித்து ஐ.நாசபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வெளி தாக்குதல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். பதற்றம் மேலும் அதிகரிப்பதை தவிர்க்க இரு நாடுகளும் தங்களுக்குள் ராணுவ கட்டுப்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துளளார்.
சர்வதேச இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையேயான நல்உறவுகளின் கொள்கைகளுக்கு ஒத்துழைத்து ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அனைத்து விதமான பதற்றத்தையும் அமைதியான முறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…